குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட எயார் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் விழுந்து வெடித்துச் சிதறியது.
இதில் பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் இருந்த 7 மாணவர்கள் பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.