BREAKING

உள்நாட்டு செய்தி

இரண்டாவது நாளாகவும் தொடரும் வேலைநிறுத்தம்

இரண்டாவது நாளாகவும் தொடரும் வேலைநிறுத்தம்

நிறைவு காண் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தொழிற்சங்கங்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது .

இந்த 24 மணி நேர வேலைநிறுத்தம் நேற்று (05) காலை 8.00 மணிக்கு தொடங்கி இன்று காலை 08.00 முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நேற்று நிறைவு காண் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு, வேலைநிறுத்தத்தை 48 மணி நேரம் வரை தொடர முடிவு செய்தது.

பதவி உயர்வுகள், வார இறுதி மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள், பட்டதாரி ஆட்சேர்ப்பு சிக்கல், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஒப்பந்தங்களை புறக்கணித்தல், ஓய்வூதிய நிபந்தனைகள் மற்றும் பயிற்சிகள் போன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று (05) சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டுமானால், அவர்கள் முதலில் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.

அமைச்சரின் அறிக்கைக்கு பதிலளித்த நிறைவு காண் மருத்துவ நிபுணர்கள் சங்கம், தற்போதைய சுகாதார அமைச்சரின் நேர்மறையான தலையீடு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இல்லாததால் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறியது.

எவ்வாறெனுனும் நேற்று முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் சேவைகள் முடங்கியதோடு, நோயாளர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இரசாயன மருத்துவ பரிசோதனைகள், மருந்து வழங்குனர்கள் உள்ளிட்ட மருத்துவ துறைசார் பணியாளர்கள் இவ்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். எவ்வாறிருப்பினும் புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலை, சிறுநீரக நோயாளர் வைத்தியசாலை, இரத்த வங்கி சேவை என்பவற்றில் வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

எனினும் தேசிய கண் வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளில் பெரும்பாலான சேவைகள் இடம்பெறவில்லை.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!