இன்று(15)அதிகாலை 5:20 மணியளவில், ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த உலங்குவானூர்தி, கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது.
இதில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக தெளிவற்ற நிலையில் கௌரிகுண்ட் காட்டு பகுதியில் விழுந்து விபத்து நிகழ்ந்ததாக மாவட்ட பேரிடர் அதிகாரி நந்தன் சிங் ராஜ்வர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.