BREAKING

உள்நாட்டு செய்தி

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சமையல் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு பச்சை அயோடின் கலக்காத உப்பை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உப்பு தொகை இலங்கை அரச வர்த்தக (இதர) கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்களால் சந்தைக்கு வழங்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!