BREAKING

உள்நாட்டு செய்தி

காலி முகத்திடலில் மக்கள் பார்வைக்காக 1500 அடி உயரத்தில் தாழ்வாக பறந்த விமானம்

காலி முகத்திடலில் மக்கள் பார்வைக்காக 1500 அடி உயரத்தில் தாழ்வாக பறந்த விமானம்

ஏயார்பஸ் A330-200 (4R-ALT) வகையை சேர்ந்த அகலமான உள்ளக அமைப்பை கொண்ட இந்த விமானம் ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸ் விமான சேவையில் இணைகிறது,

இதனை கொண்டாடும் வகையில் இந்த விமானமானது இன்று காலை கொழும்பு கடற்கரை பகுதியில் மிக தாழ்வாக பறந்தது.

அதிகளவான மக்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் கூடியிருந்ததோடு ஆரவாரமாக இந்த புதிய விமானத்தை கண்டு ரசித்தனர்.

அத்தோடு விமானத்தின் அடிப்பகுதியில் ‘Visit Sri Lanka’ என குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

04 June 2025 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இன்று (04) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிது.

இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளது.

இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முன்னர், மிகவும் தாழ்வாக கொழும்பின் கடற்கரையோரமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று காலை 9.40 மணியளவில் கொள்ளுப்பிட்டி – பாணந்துறை கடற்கரை அண்டிய பகுதியில் பறந்து சென்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!