ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு,நேற்று (03) மாலை வியட்நாம் நோக்கி புறப்பட்டுள்ளார்.
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை அவர் இவ்விஜயத்தில் இணைந்திருப்பார்.
வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இடம்பெறும் ஜனாதிபதியின் இந்த வியட்நாம் அரச விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.