நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் கற்பாறைகளுடன் மண் சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு இன்று (03) அதிகாலையில் ஏற்பட்ட நிலையில் தற்போது அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகிறது.
எவ்வாறாயினும் தற்போது வாகனங்கள் தங்குதடையின்றி பயனிக்க கூடிய நிலை காணப்பட்டாலும் காலை மற்றும் மாலை நேரத்தில் இப்பகுதியில் அதிக பனிமூட்டம் நிறைந்த வானிலை காணப்படுவதினால் நுவரெலியா, தலவாக்கலை, ஹட்டன் மற்றும் மெராயா வழியூடாக டயகமவுக்கான போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இவ் மண்சரி ஏற்பட்டுள்ளதுடன் இப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என நானுஓயா பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.