பகிடிவதை காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன் மூலம் மொத்த கைதுகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர் .