ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம், எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.
பிரான்சில் உள்ள விநியோக நிலையத்தில் இருந்து வரும் இந்த விமானம், காலை 8.00- 9.00 மணிக்கு கொழும்பு கடற்கரையோரத்தில் 1,500 அடி உயரத்தில் பறந்து, கொழும்பு துறைமுக நகரின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை தெரியும், பின்னர்; பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில தரையிறங்கும் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பு கூடுதல் நேரம் விமான நிலையத்தை; சுற்றி பறக்கும். விமான ஆர்வலர்கள் மற்றும் விமானப் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானக் குழுவை வலுப்படுத்தும் வகையில் அமையவுள்ளதுடன் விமானத்தின் வருகை பார்வையைப் பார்க்க இது ஒரு அற்புதமான வாய்ப்பாகும், என்று ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
4R-ALT, எனப் பதிவு செய்யப்படவுள்ள இந்த விமானம், இரண்டு Rolls-Royce Trent 772B-60 இஞ்சின்களால் இயக்கப்படுகின்றது.