BREAKING

உள்நாட்டு செய்தி

100 மெட்ரோ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

100 மெட்ரோ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபை (S.L.T.B) பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் வகையில் 100 மெட்ரோ பேருந்துகளை ஒரு முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த வசதியான, மேம்பட்ட தொழில்நுட்ப பேருந்துகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டது.

அதன்படி, மேல் மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட மாகும்புர (கொட்டாவ), கடுவெல, கடவத்த மற்றும் மொரட்டுவ போன்ற பிரதான வழிகளில் இடைவழிகள் சிலவற்றின் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கான சொகுசான, தாழ்வான மிதிபலகை கொண்ட 100 பேரூந்துகளை சேவையில் அமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!