BREAKING

உள்நாட்டு செய்தி

கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையில் இடம்பெற்றுவந்த பயணிகள் கப்பல் சேவை கடும் காற்று வீசும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்று 14 மற்றும் 15 நாளையும் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 16-ம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வளிமண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமான இன்று (14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!