BREAKING

உள்நாட்டு செய்தி

சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதி தறகாலிகமாக மூடப்படுகிறது

சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதி தறகாலிகமாக மூடப்படுகிறது

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இப்பகுதியில் உள்ள பாலம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், புதிய பாலம் அமைப்பதற்காக இந்த வீதி மூடப்படுகிறது.

அதன்படி, இன்று (14) முதல் ஜூன் 24 வரை, 10 நாட்களுக்கு வீதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதி மூடப்பட்டிருக்கும் காலத்தில், வாகன சாரதிகள் நோர்டன் பிரிட்ஜ் சாலை மற்றும் கலுகல, பொல்பிட்டி, லக்சபான வழியாக பிரவேசிக்கும் வாகனங்கள் ஹட்டன் நோர்டன் பிரிட்ஜ் வீதிகளை பயன்படுத்துமாறு நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது அத்துடன் இது குறித்து பல இடங்களில் அறிவிப்புப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோனாக் அட்லஸ் பகுதியில், களனி ஆற்றில் பாயும் கால்வாயின் மீது அமைந்துள்ள பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளது. பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய பாலம் கட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பாலம் மோசமான நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக அது முற்றிலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!