கடந்த 20 ஆம் திகதி வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.
திம்பிரிகஸ்யாய பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் துமிந்த திசாநாயக்க வசித்து வந்த நிலையில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) அதிகாரிகளால் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டார்.