BREAKING

வெளிநாடு

பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு -பதவியை ராஜினாமா செய்த அதிகாரியால் பரபரப்பு

பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு -பதவியை ராஜினாமா செய்த அதிகாரியால் பரபரப்பு

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக இம்ரான் கான் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தவறு நடந்தமை உறுதியாகியுள்ளது. தவறினை ஒப்புக்கொண்டு அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராவல்பிண்டியின் முன்னாள் கமிஷனரான லியாகத் அலி சத்தா, இன்று (17) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது “தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக மாற்றப்பட்டனர் என தெரிவித்தார்.

நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தலைமை நீதிபதி முழுவதுமாக இதில் ஈடுபட்டார்கள்.

இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்ட லியாகத் அலி சத்தா தனது அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், நாட்டின் முதுகில் குத்துவது தன்னை தூங்க விடாது என்றார். நீதிக்கு எதிரான இந்த செயலுக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல் மற்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த அரசியல் தலைவர்களுக்கான எந்த தவறான செயல்களிலும் ஈடுபடாதீர்கள் என்பதுதான் என்னுடையே வேண்டுகோள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.ஆனால், முடிவுகள் அறிவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இம்ரான் கானின் தெஹ்ரிக்-ரீ-இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றதாகவும், முடிவுகள் மாற்றப்பட்டதாகவும், அக்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

 

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!