BREAKING

உலகம்

மேலும் இரண்டு பிணைக்கைதிகளை திரும்பப்பெற இஸ்ரேல் மறுத்தது – ஹமாஸ்

காசா மீது இஸ்ரேல் நடாத்தும் தொடர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான சிறார்கள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தியபோது, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றதாகவும் சிலரை கொலை செய்ததாக இஸ்ரேல் குற்றம் குற்றம்சாட்டியது.

அதன்பின் இஸ்ரேல், ஹமாஸ் போராளிகளை குறிவைத்து காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.மேலும் இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே பிணைக்கைதிகள்- கைதிகள் பரிமாற்றம் செய்துகொள்ள கட்டார் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

அதேவேளை, ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், மறுபக்கம் இஸ்ரேல் பாலஸ்தீன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளில தாய் மற்றும் மகள் என இரண்டு அமெரிக்கர்களை ஹமாஸ் விடுவித்தது.

இந்த நிலையில் மேலும் இரண்டு பேரை அதன்அடிப்படையில் விடுவிக்க தயாராக இருந்தோம். ஆனால், இஸ்ரேல் அவர்களை பெற மறுத்துவிட்டது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், ஹமாஸின் பொய் பிரசாரத்தை நாங்கள் நம்பமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.மேலும், கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன மக்களை மீட்க அனைத்து வழிகளிலும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!