BREAKING

வெளிநாடு

ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல் – பலி எண்ணிக்கை உயர்வு

ஜனாதிபதி தேர்தலில் 5-வது முறையாக விளாடிமிர் புதின் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானார்.

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியான குரோகஸ் சிட்டி ஹால் எனும் பாரிய இசை அரங்கத்தில் பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சியின் போது கிறிஸ்தவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது.
உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தினர்.

இதனால் உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதன் போது, புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதனால் மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தத்துடன் பலர் உயிரிழந்தனர்.

இதுபற்றி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்து உள்ளது. 187-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.
60க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேலும் , பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.இதனை தொடர்ந்து, 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்றதுடன், பொலிசாரும் குவிக்கப்பட்டனர்.மேற்கூரையின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களில் பலரும் மீட்பு குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

ரஷியாவில் சில நாட்களுக்கு முன் நடந்த ஜனாதிபதி தேர்தலில் புதின் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானார்.

5-வது முறையாக வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பார். இதனால், உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!