சீனாவில் பறவை காய்ச்சலுக்குள்ளாகி (எச்3என்8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
குறித்த பெண், கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
