காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தமை தொடர்பில் வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியாவின் சர்வதேச அமைப்புகளுக்கான துணை வெளியுறவுத்துறை அமைச்சர் கிம்சன் கியோங் கருத்து தெரிவிக்கும் போது,
“பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்த கூட்டாளியைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோத மற்றும்
நியாயமற்ற இரட்டைத் தரங்களின் வெளிப்பாடு மட்டுமல்ல, அது மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்” என கூறினார்.