உள்ளூர் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாகும் – அமைச்சர் குமார ஜயகொடி

தேசிய மின்கட்டமைப்பில் 5 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் புதிய சூரிய மின் நிலையத்தை எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி நேற்று (17) திறந்து வைத்தார்.

குருநாகல், ஹிரிப்பிட்டியவில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சூரிய மின் நிலையத்தை, பான் ஏசியன் பவர் பிரைவேட் லிமிடெட்டின் துணை நிறுவனமான PAPMPHL சோலார் பிரைவேட் லிமிடெட் இயக்குகின்றது. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர்,

“தனியார் துறை முதலீடுகளை, குறிப்பாக மின் உற்பத்தியில், ஏற்றுக்கொண்டு ஊக்குவிப்பதோடு, எரிசக்தி துறையில் அரசு உரிமையைப் பாதுகாப்பதே எங்கள் அரசாங்கத்தின் கொள்கையாகும். சூரிய மின் துறையில் உள்ளூர் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களின் முதலீட்டை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், இது நமது நாட்டிற்கு ஒரு ஆசீர்வாதமாகக் கருதப்படலாம்.

மேலும் இந்த சூரிய மின் நிலையம், ஆண்டுக்கு 10 GW மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும், அதன்படி, இது ஆண்டுக்கு 3.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ஒரு பில்லியன் ரூபாய் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

Exit mobile version