சுவிட்சர்லாந்து தூதுவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, நேற்று (17) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இதன்போது, ‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகச் சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிகளைப் பிரதமர் பாராட்டினார்.

மேலும்,இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இரு தரப்பினரும் தமது கவனத்தைச் செலுத்தினர்.

 

Exit mobile version