நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(30) இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இவ்வாறு மழை பெய்யக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளதாக திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல், ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.