BREAKING

உள்நாட்டு செய்தி

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்திற்கு நிரந்தர தீர்வு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்திற்கு நிரந்தர தீர்வு

பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவாக 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில், பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களுக்கான நாளாந்த மொத்த கொடுப்பனவு 1700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலதிக தேயிலை கிலோவொன்றுக்காக வழங்கப்படும் கொடுப்பனவும் 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!