BREAKING

கல்வி

பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் – கல்வி அமைச்சு

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கமைய, பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பாடசாலை புள்ளிகளானது, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை, 6 ஆம் தரத்துக்காக பிரபல பாடசாலைகளில் சேர்க்கும் செயன்முறைக்கு பின்பற்றப்படுகிறது.

அதன்படி, சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!