வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஏற்பாடு செய்த கலாசார பக்தி கீதங்களுடன் கூடிய வருடாந்த கொழும்பு பௌத்தலோக வெசாக் வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (14) மாலை கலந்து கொண்டார்.
அலங்கார விளக்குகள், கண்கவர் தோரணங்கள், பல வகையான தன்சல்கள் என இந்த வெசாக் வலயம் வண்ணமயமாக காட்சியளித்தன. பெருந்திரளான மக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.